சுகோத்தாய் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
சுகோத்தாய் இராச்சியம் (ஆங்கிலம்: Sukhothai Kingdom, தாய்: ราชอาณาจักรสุโขทัย) என்பது கி.பி 1238-ஆம் ஆண்டு முதல் 1438-ஆம் ஆண்டு வரையில் தாய்லாந்தின் வடமத்தியில் சுகோத்தாய் நகரையும் அதன் அருகில் இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.
விரைவான உண்மைகள் சுகோத்தாய்இராச்சியம்Kingdom of Sukhothaiอาณาจักรสุโขทัย, தலைநகரம் ...
சுகோத்தாய் இராச்சியம் Kingdom of Sukhothai อาณาจักรสุโขทัย | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1238–1583 | |||||||||
தலைநகரம் | சுகோத்தாய் (1238 - 1419) பிட்சானுலொக் (1419 - 1583) | ||||||||
பேசப்படும் மொழிகள் | தாய் | ||||||||
சமயம் | தேரவாத பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• 1249- 1257 | சிறீ இந்திராதித்தியா | ||||||||
• 1279 - 1299 | இராமகாம்கெயிங்கு | ||||||||
• 1448 - 1488 | திரிலோகநாத் | ||||||||
• 1534 - 1569 | மகா தம்மராசாத்திரத் | ||||||||
• 1569 - 1583 | நரெசுவான் | ||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்காலம் | ||||||||
• லாவோ இராச்சியத்தில் இருந்து விடுதலை | 1238 | ||||||||
• விரிவாக்கம்: இராமகாம் கெயிங்கு ஆட்சி | 1279 - 1299 | ||||||||
• ஆயுத்தயா இராச்சியத்துடன் இணைவு | 1448 | ||||||||
• நரெசுவான் ஆட்சியில் இணைப்பு | 1583 | ||||||||
|
மூடு
இந்த இராச்சியம் கி.பி.678-இல் பிரயா பலிராஜ் (Phraya Paliraj) என்பவரால் நிறுவப்பட்டது என்றும் அவரின் பூர்வீகம் இலாவோ இராச்சியம் என்றும் தாய்லாந்து காலச் சுவடுகள் (Northern Thai Chronicles) பதிவு செய்துள்ளன.[1]
1438-ஆம் ஆண்டு வரை ஒரு சுதந்திர அரசாக இருந்தது. அதன் அரசரான போரோம்மாபன் (Borommapan) எனும் மகா தம்மராச்சா IV (Maha Thammaracha IV) இறந்த பிறகு, அதன் அண்டை இராச்சியமான அயூத்தியாஇராச்சியத்தின் ஆளுமையின் கீழ் வந்தது.