சுண்டன் வள்ளம்
From Wikipedia, the free encyclopedia
சுண்டன் வள்ளம் என்பது கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு ஆகும் (வள்ளம் = படகு). இது கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. வள்ளங்களி எனப்படும் படகுப்போட்டியில் இவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சுண்டன் வள்ளங்கள் 100 முதல் 158 அடி வரை நீளம் கொண்டவை. வள்ளத்தின் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். முன்பாகம் நீளத்தில் கூர்மையாக இருக்கும். படகில் நூறு ஆட்களுக்கும் மேல் அமர முடியும்.[1]
இந்த வள்ளங்கள் செய்ய அஞ்சிலி மரம் எனப்படும் அயனி மரம், தேக்கு, கடம்ப மரம் போன்றவை பயன்படுத்தபடுகின்றன.[2]