சுவர் ஓவியம்
From Wikipedia, the free encyclopedia
சுவர் ஓவியம் (mural) என்பது சுவரில், கூரையில் அல்லது பெரிய நிரந்தரமான மேற்பரப்பில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கலை வேலைப்பாடான ஓவியமாகும். சுவர் ஓவியத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான பண்பு என்னவெனில், அங்குள்ள இடவெளியின் கட்டட மூலக் கூறுகள் படத்துடன் இசைவாய் உள்வாங்கப்படுவதாகும்.
சில சுவர் ஓவியங்கள் சுவரில் இணைக்கப்பட்டுள்ள பாரிய திரைச் சீலைகள் மீது வரையப்படுகின்றன. இவ்வாறான ஓவிய வேலைகள் "சுவர் ஓவியம்" என அழைக்கப்படுவதில் கலை உலகில் மாறுபட்ட சில கருத்துக்கள் உள்ளன.[1] ஆயினும் இவ்வாறான நுட்பங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பொதுவாகக் காணப்பட்டு வருகின்றன.[2]