செசில் (அரிமா)
From Wikipedia, the free encyclopedia
செசில் (Cecil), 13 வயது நிறைந்த தென்மேற்கு ஆப்பிரிக்க அரிமா (Panthera leo bleyenberghi) ஆகும். இது சிம்பாப்வேயின் வாங்கே தேசியப் பூங்காவில் வாழ்ந்து வந்தது. இப்பூங்காவின் வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருந்த செசில், ஆக்சுப்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு பரந்த ஆய்வின் பகுதியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.[1]
விரைவான உண்மைகள் செசில், இனம் ...
செசில் | |
---|---|
வாங்கே தேசியப் பூங்காவில் செசில் (2010). | |
இனம் | சிங்கம் |
பால் | ஆண் |
பிறப்பு | அண். 2002 |
இறப்பு | (2015-07-01)1 சூலை 2015 (அகவை 13) வாங்கே மாவட்டம், சிம்பாப்வே |
Named after | செசில் ரோடுசு |
மூடு
அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் பால்மர் என்னும் பொழுதுபோக்கு வேட்டையாடி இதனை அம்பெய்திக் காயப்படுத்தினார்.[2][3][4][5] பிறகு, சூலை 1, 2015 அன்று, ஏறத்தாழ 40 மணி நேரங்களுக்குப் பிறகு, செசிலைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.[6] இக்கொலை பன்னாட்டு ஊடகக் கவனத்தை ஈர்த்ததோடு விலங்குப் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகள், புகழ்பெற்றவர்களின் கோபத்தையும் ஈட்டியது. பால்மரைக் கண்டித்து இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன. [2]