செனாப் ஆறு
From Wikipedia, the free encyclopedia
செனாப் ஆறு (Chenab River) இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகளில் ஓடுகின்ற ஒரு முக்கியமான ஆறாகும். பஞ்சாப் மண்டலத்தில் ஓடும் முக்கியமான ஐந்து ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் லாகவுல் மற்றும் சிபிதி மாவட்டத்தில் இமயமலையின் மேற்புறத்தில் செனாப் ஆறு தொடங்குகிறது. சம்மு காசுமீர் மாநிலத்தின் சம்மு மண்டலம் வழியாகப் பாய்ந்து செனாப் ஆறு பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் சமவெளிகளில் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் சீலம் ஆறு இணைகிறது. அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறும் இணைகிறது. பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு தெற்கு பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க உக்சு செரிப் நகருக்கு அருகில் செனாப் ஆறு சத்லச் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாட்டு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாசு ஆறானது சத்லச் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ ஆகும். இந்திய பாக்கித்தான் நாடுகளுக்கிடையில் கையெழுத்தான சிந்து நதிநீர் உடன்படிக்கையின் அடிப்படையில் செனாப் ஆற்றின் நீர் பாக்கித்தானுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.[3][4]
செனாப் ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா, பாக்கித்தான் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | Baralacha La pass |
⁃ அமைவு | இந்தியா இமாச்சலப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 32°38′09″N 77°28′51″E |
முகத்துவாரம் | சங்கமம் சத்லஜ் ஆறுடன் பஞ்சநாடு ஆறு தோற்றம்]] |
⁃ அமைவு | பகவல்பூர் மாவட்டம், Punjab, பாக்கித்தான் |
⁃ ஆள்கூறுகள் | 29°20′57″N 71°1′41″E |
நீளம் | 960 km (600 mi)approx. |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அக்னூர்[1] |
⁃ சராசரி | 800.6 m3/s (28,270 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ வலது | Marusadar River[2] |
சந்திரா, பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் செனாப் ஆறு தோன்றுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் லாகவுல் மற்றும் சிபிதி மாவட்டத்தில் கீலாங்கு நகருக்கு தென்மேற்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தண்டியில் இவ்விரண்டு நதிகளும் சங்கமிக்கின்றன.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைக் கணவாயான பாரா-லாச்சா கணவாய்க்கு கிழக்கே சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள சூர்யா தால் ஏரியிலிருந்து பாகா நதி உருவாகிறது. சந்திரா நதியும் அதே கணவாய்க்கு கிழக்கே பனிப்பாறைகளிலிருந்து உருவாகிறது. இவ்விரு நதிகளின் தண்ணீரை பிரிக்கும் செயல்பாட்டிலும் இக்கணவாய்க்குப் பங்கு உண்டு. சந்திரா நதி பாகா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பாக 115 கிலோமீட்டர் அல்லது 71 மைல்கள் தொலைவை கடந்து செல்கிறது. பாகா நதியும் தண்டியில் சங்கமிப்பதற்கு முன்பு குறுகலான மலைகளுக்கிடையில் உள்ள வழிகளில் 60 கிலோமீட்டர் தொலைவு அல்லது 37 மைல்களை கடந்து வருகிறது.