சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017
From Wikipedia, the free encyclopedia
உருசியா நாட்டின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகர சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் 3 ஏப்ரல் 2017 அன்று குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டியானது சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் உடனடியாக ஒன்பது பேர் மரணமடைந்தனர் பின்னர் மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்[6][7][8][3][9]. வெடிபொருளானது கைப்பெட்டியினுள் (briefcase) வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது வெடிபொருளானது மற்றுமொரு விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது[10][11][12] T[9][10]. இக்குண்டுவெடிப்பின் சூத்ரதாரியாக கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற அக்பர்ஷான் ஜாலியோய் (Akbarzhan Jaliov) சந்தேகிக்கப்படுகிறார்[13].
சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017 | |
---|---|
இடம் | சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே, உருசியா. |
ஆள்கூறுகள் | 59°54′59″N 30°19′07″E` |
நாள் | ஏப்ரல் 3, 2017 (2017-04-03) 14:40[1] (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC +3)) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | பொதுமக்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல்[2] |
ஆயுதம் | தற்கொலை வெடிகுண்டு |
இறப்பு(கள்) | 14[3] (+1 தற்கொலையாளி) |
காயமடைந்தோர் | 51[4][5] |