ஜார்ஜ் பிடெல் ஏரி
ஆங்கிலக் கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் (*1801 – †1892) / From Wikipedia, the free encyclopedia
சர் ஜார்ஜ் பிடெல் ஏரி (Sir George Biddell Airy, 27 சூலை 1801 – 2 சனவரி 1892) ஓர் ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார்.
ஜார்ஜ் பிடெல் ஏரி George Biddell Airy | |
---|---|
1891 இல் ஏரி | |
பிறப்பு | (1801-07-27)27 சூலை 1801 ஆல்னிக், நோர்தம்பர்லாந்து, இங்கிலாந்து |
இறப்பு | 2 சனவரி 1892(1892-01-02) (அகவை 90) கிரேனிச்சு, இலண்டன் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல், கணிதம் |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் அரசு கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் |
Academic advisors | ஜார்ச் பீக்கொக் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | பியர்சு மோர்ட்டன் |
அறியப்படுவது | அரச வானியலாளர் |
விருதுகள் | சுமித் பரிசு (1823) ஆல்பர்ட் பதக்கம் (1876) அரசு பதக்கம் (1845) இலாலண்டே பரிசு (1834) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் கோப்ளே பதக்கம் (1831) |
ஜார்ஜ் ஏரி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வரித் தண்டலர். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார்.[1] பிறகு 1819இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். 1835 இல் இருந்து அரச வானியலாராக 46 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு இங்கிலாந்து அரசக் கழகம் கோப்லே விருதையும் அரசக் கழக விருதையும் (சர்) வழங்கியது. 1827முதல் 1883 வரை இவர் அக்கழகத்தின் தலைவராகவும் விளங்கினார்.
ஏரி கேம்பிரிட்ஜ் வான்காணகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது மேம்படுத்தப்பட்ட வான்கோளக் கிடைவரை நோக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நோக்கீடுகளை உரிய அளவுகோலில் அடக்கி பதிப்பிக்கும் முறையை உருவாக்கினார்.
1847இல் நிலா நோக்கீடுகளுக்கான வானுச்சித் தொடுவரை (altazymuth) கருவியை நிறுவினார். 1859இல் 33செ.மீ. புவி நடுவரை தொலைநோக்கியையும் புதிய சுழலியக்க வட்டத்தையும் (new transit circle) அமைத்தார். மேலும் 1838இல் காந்த, வானிலையியல் என்ற புதிய துறை ஒன்றையும் தோற்றுவித்தார்.[2][3] சூரியக் கரும்புள்ளிகளுக்கான அன்றாடப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தினார்.
இவர் அமெரிக்கா, கனடா நட்டெல்லையை வகுத்தார். ஒரிகான், கடலோரப் பகுதி எல்லையையும் வகுத்தார்.