ஜுத்தி (பஞ்சாபி)
From Wikipedia, the free encyclopedia
ஜுத்தி (பஞ்சாபி: ਜੁੱਤੀ) அல்லது பஞ்சாபி ஜுத்தி (பஞ்சாபி: ਪੰਜਾਬੀ ਜੁੱਤੀ) (உச்சரிப்பு: 'ஜுத்-தி' - பஞ்சாபி (அ) 'ஜு-தி' - இந்தி/உருது) என்பது வட இந்தியா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை காலணியாகும். முற்காலங்களில் பாரம்பரியமாக அவைத் தோலால் செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நூலாலான நுட்பமான வேலைப்பாடுகளைப் பெற்றிருக்கும். எனினும் காலமாற்றத்திற்கேற்ப ரப்பர் காலடிகள் கொண்ட ஜுத்திகள் போன்ற பல்வேறு வகை ஜுத்திகளும் கிடைக்கப்பெறுகின்றன. பஞ்சாபி ஜுத்தி தவிர வேறு பல ஊர் பாணிகளிலும் உள்ளன. இன்றளவில் அம்ரித்சர் மற்றும் பட்டியாலா ("டில்லா ஜுத்தி") கைவினை ஜுத்திகளுக்கான முக்கிய வர்த்தக மையங்களாகத் திகழ்கின்றன, அங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பஞ்சாபிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[1][2][3] மோஜாரிஸுடன் நெருங்கிய தொடர்புடையது. ஜுத்திகள் பல்வேறு உள்ளூர் வடிவ மாற்றங்களுடனும், சில சமயங்களில் வடிவமைப்போர் பொருத்த மாற்றங்களுமாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அவற்றுள் இடது வலது வேறுபாடு இருக்காது, காலப்போக்கில் அவை அணியப்படும் காலின் உருவத்தை ஏற்கும் . பொதுவாக தட்டையான அடிப்பாகத்தைக் கொண்டிருக்கும், ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும், எனினும் ஆணிற்கான காலணிகளில் மீசை வடிவில் மேல்நோக்கி வளைக்கப்பட்ட நோக் எனப்படும் நீட்டிக்கப்பட்ட கூரான முனை காணப்படும், அவை குஸ்ஸா என்றும் வழங்கப்படும். மற்றும் பெண்களுக்கான ஜுத்திகளில் கணுக்காலருகில் பின்பகுதி இல்லாமல் அமைந்திருக்கும், காலமாற்றங்களையும் கடந்து விழாக்களுக்கு அணியப்படும் ஆடைகளில், குறிப்பாக திருமண ஆடைகளுள், ஜுத்திகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அழகுபடுத்தப்படாத எளிய ஜுத்திகள் பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளில் அன்றாட பயன்பாட்டில் இடம் பெறுகின்றன.[4]
ஜுத்தி கஸூரி பேரி நா பூரி ஹே ரப்பா மற்றும் ஜுத்தி லகுதி வைரியா மேரே போன்ற பல பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள் ஜுத்திகளைக் குறிப்பிடுகின்றன.[1]