தங்க நச்சுத் தவளை
From Wikipedia, the free encyclopedia
தங்க நச்சுத் தவளை ( golden poison frog (Phyllobates terribilis),[1] இதன் வேறு பெயர்கள் golden frog, golden poison arrow frog, golden dart frog ) என்பது கொலொம்பியாவின் பசிபிக் கடற்கரைப் பகுதியல் காணப்படும் நச்சுத்தன்மைவாய்ந்த நச்சு அம்புத் தவளை வகையைச் சேர்ந்த ஒரு ஓரிடவாழி தவளையாகும். இவை ஆண்டு மழையளவு 5 மீ அல்லது அதற்கு மேற்பட்டுள்ளதாகவும், வெப்பநிலை குறைந்தது 26 ° செ என்ற அளவும், கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் முதல், 200 மீட்டர் வரையும், ஈரப்பதம் 80-90% உள்ள மழைக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஒரு சமூக விலங்காகும், இவை ஆறு தவளைவரையிலான குழுக்களாக வாழுகின்றன. இந்த தவளைகள் பெரும்பாலும் சிறிய அளவுள்ளதாகவும், பிரகாசமான வண்ணங்கள் கொண்டதாகவும் தீங்கற்றதாகவும் கருதப்படுகிறது, ஆனால் காட்டு தவளைகள் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளன.[2] இரண்டு அங்குலமே உள்ள இந்தத் தவளைதான் உலகிலேயே மிக அதிக நச்சு கொண்ட தவளை. ஒரு முறை நச்சை பீய்ச்சி அடித்தால் மூன்றே நிமிடங்களில் 10 மனிதர்களைக் கொன்றுவிடக்கூடியது. பத்து ஆயிரம் சுண்டெலிகளைக் கொன்றுவிடக் கூடியது. இவை பொன் நிறத்தில் மட்டுமின்றி, ஆரஞ்சு, வெளிர் பச்சை நிறங்களிலும் இவை காணப்படுகின்றன. தன் ஆபத்தானவன் என்று மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்காகவே இவ்வாறு கண்கவர் வண்ணங்கள் கொண்டுள்ளது. அழிந்துவரக்கூடிய அரிய உயிரினங்களின் பட்டியலில் இந்தத் தங்கத் தவளைகளும் உள்ளன. காடுகளை அழித்தல், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கச் சுரங்கம் அமைத்தல், கோகோ பயிரிடுதல் போன்ற பல காரணங்களால் தங்கத் தவளைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.[3]