தில்லி பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
தில்லிப் பல்கலைக்கழகம் (University of Delhi) இந்தியாவில் தில்லியின் துவாரகா பகுதியில் அமைந்துள்ள ஒரு நடுவண் அரசின் பல்கலைக்கழகம் ஆகும். 1922 இல் அமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகாவும், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இங்கு அநேகமாக அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, மற்றும் பட்டப் பின்படிப்புகள் படிக்க வசதிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | உண்மை |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1922; 102 ஆண்டுகளுக்கு முன்னர் (1922) |
நிதிக் கொடை | ₹433 கோடி (US$54 மில்லியன்)[1] |
வேந்தர் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் |
துணை வேந்தர் | பி.சி ஜோஷி |
மாணவர்கள் | 23,034[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,648[2] |
3,316[2] | |
அமைவிடம் | , 28.69°N 77.21°E / 28.69; 77.21 |
வளாகம் | துவாரகா, தில்லி நகர்ப்புறம் |
நிறங்கள் | ஊதா |
நற்பேறு சின்னம் | யானை |
சேர்ப்பு | UGC, NAAC, ACU |
இணையதளம் | du |
மூடு
இந்தியாவின் உதவிக் குடியரசுத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார்.