துசிடிடீஸ்
கிமு 5 ஆம் நூற்றாண்டு ஏதெனியன் வரலாற்றாசிரியர் மற்றும் தளபதி / From Wikipedia, the free encyclopedia
துசிடிடீஸ் (Thucydides, கிரேக்கம் : கிரேக்கம்: Θουκυδίδης ; சு. 460 – சு. கிமு 400 ) என்பவர் ஒரு ஏதெனியன் வரலாற்றாளர் மற்றும் தளபதி ஆவார். இவரது இஸ்ட்டரீ ஆப் பெலோபொன்னேசியன் வார் என்ற படைப்பானது அக்கால கிரேக்கத்தின் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. அந்த நூலானது கிமு ஐந்தான் நூற்றாண்டில் கிமு 411 ஆம் ஆண்டு வரை எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் நடந்த போரை விவரிக்கிறது.
துசிடிடீஸ் | |
---|---|
கிமு நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிரேக்க மூலத்தின் ரோமானிய நகலிலிருந்து (ஹோல்காம் ஹாலில் அமைந்துள்ளது) துசிடைடிஸ் புசுக்கின் அருங்காட்சியகம்) பிளாஸ்டர் காஸ்ட் மார்பளவு சிலை | |
தாய்மொழியில் பெயர் | Θουκυδίδης |
பிறப்பு | அண். கிமு 460 கிமு 455 இக்கு பின்னர் இல்லை [1][2] ஹாலிமஸ், ஏதென்ஸ் (நவீன அலிமோஸ்) |
இறப்பு | அண். கிமு 400 இறந்த இடம் தெரியவில்லை |
பணி | வரலாற்றாளர், தளபதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | History of the Peloponnesian War |
உறவினர்கள் | Oloros (தந்தை) |
சிலர் துசிடிடீசை " அறிவியல்பூர்வ வரலாற்றின் தந்தை" என்று அழைக்கின்றனர். அவர் வரலாற்று நிகழ்வுகளை தெய்வங்களின் தெய்வீக சக்தியால் நிகழ்ந்தது என்று குறிப்பிடாமல் சன்றுகளை சேகரிப்பதிலும் காரணத்தையும், விளைவையும் பகுப்பாய்வு செய்வதிலும் பாரபட்சமற்ற கடுமையான தரத்தைப் பயன்படுத்தினார் என்று நம்புகிறார்கள். [3] [4]
இவரது நூல்கள் இன்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் இராணுவக் கல்லூரிகளில் வசிக்கப்படுகின்றன: இவரது மெலியன் டயலாக்ஸ் நூலானது சர்வதேச உறவுக் கோட்பாட்டின் ஒரு முக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் இவரது பெரிகல்ஸ் பனீரியல் ஓரேசன் பதிப்பு அரசியல் கோட்பாட்டாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் செவ்வியல் மாணவர்களால் பரவலாக வாசிக்கப்படுகிறது. [5]
பொதுவாக, கொள்ளைநோய்கள், படுகொலைகள், உள்நாட்டுப் போர்கள் போன்ற நெருக்கடிகளின்போது நடத்தையை விளக்குவதற்கு மனித இயல்பு பற்றிய புரிதலை துசிடிடீஸ் உருவாக்குகிறார்.