தூற்றுதல்
அறுவடையான தானியங்ங்களில் உள்ள தூசு துப்பை காற்றின் மூலமாக பிரித்தல் / From Wikipedia, the free encyclopedia
காற்றில் தூற்றுதல் (Wind winnowing) என்பது நெல் தாளில் இருந்து நெல்மணிகளப் பிரிக்க பண்டைய பண்பாடுகளில் பயன்படுத்திய வேளாண்மை முறையாகும் இம்முறை தேக்கிவைக்கப்பட்ட நெல்மணிகளில் இருந்து தீங்குயிரிகளைப் பரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நெற்கதிர்களை கால்நடைகளைக் கொண்டு மிதித்துப் போரடித்த பிறகு காற்றில் தூற்றி நெல்மணிகள் பிரிக்கப்படுகின்றன.
மிக எளிய முறையில் கூலமும் பதரும் கலந்த கலவை காற்றில் எறியப்படுகிறது. அப்போது பதர்கள் காற்றில் அடித்துச் செல்ல கூலமணிகள் நேரடியாக கீழே விழுகின்றன. இங்குத் தூற்றுதலுக்குக் கூடையோ முறமோ அறுவடை செய்து மிதித்த கலவையைக் காற்றில் தூவப் பயன்படுகின்றன.