தோட்டக்கலை அறிவியல்
From Wikipedia, the free encyclopedia
தோட்டக்கலை அறிவியல் (Horticulture) என்பது வேளாண்மை அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இது விவசாயத்தின் சிறப்பியல்பு பயிர்களின் வயல் அளவிலான உற்பத்திக்கு மாறாக, தோட்டங்கள் அல்லது பசுமை இல்லங்களில் தாவரங்களை வளர்ப்பதாகும். இது பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், மூலிகைகள், முளைகள், காளான்கள், பாசிகள், பூக்கள், கடல் பாசிகள், புல், அலங்கார மரங்கள் மற்றும் தாவரங்கள் போன்ற உணவு அல்லாத பயிர்கள், ஆகியவற்றின் வளர்ப்பு மற்றும் சாகுபடி பற்றிய கல்விமுறைகளைக் கொண்டது. இது தாவர பாதுகாப்பு, நிலப்பரப்பு மறுசீரமைப்பு, நிலப்பரப்பு மற்றும் தோட்ட வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மர வளர்ப்பு, அலங்கார மரங்கள் மற்றும் புல்வெளிகளையும் உள்ளடக்கியது.[1][2][3]
மானிடவியலில், தோட்டக்கலை என்பது உணவுக்காக தாவரங்களின் சிறிய அளவிலான, தொழில்துறை அல்லாத சாகுபடியால் வகைப்படுத்தப்படும் வாழ்வாதார உத்தியைக் குறிக்கிறது[4]. தோட்டக்கலை என்பது குச்சிகள், மண்வெட்டிகள் மற்றும் கூடைகளை சுமந்து செல்வது போன்ற கை கருவிகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது[5]. தோட்டக்கலைக்கு மாறாக, விவசாயம் என்பது மானிடவியலாளர்களால் உழவு, விலங்கு இழுவை மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் மண் மேலாண்மையின் சிக்கலான நுட்பங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு தீவிர உத்தியாகக் கருதப்படுகிறது[6].
தோட்டக்கலை பற்றிய ஆய்வும் நடைமுறையும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகின்றன. நாடோடி மனித சமூகங்களில் இருந்து உடலுழைப்பு இல்லாத அல்லது அரைகுறை உடலுழைப்புடைய, தோட்டக்கலை சமூகங்களுக்கு மாறுவதற்கு தோட்டக்கலை பங்களித்தது[7]. தோட்டக்கலை பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உணவுப் பொருட்களை பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தோட்டக்கலை அறிவியலைப் பாதுகாப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் தோட்டக்கலையின் மேம்பாட்டைக் கற்பிக்கின்றன, ஊக்குவிக்கின்றன மற்றும் விருத்திசெய்யத்தூண்டுகின்றன. சில குறிப்பிடத்தக்க தோட்டக்கலை நிபுணர்களில் லூகா கினி மற்றும் லூதர் பர்பாங்க் ஆகியோர் அடங்குவர்.
தோட்டக்கலை வல்லுனர்கள், தங்களது அறிவு, திறமை,தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் பயன்கள் தனிப்பட்ட அல்லது சமூக தேவைக்காக தீவிரமாக உற்பத்தி செய்வதை அதிகப்படுத்தியுள்ளார்கள். இவர்களின் வேலை தாவர இனப்பெருக்கம் செய்வது ஆகும். சாகுபடி உற்பத்தியைப் பெருக்கி மகசூலை அதிகபடுத்துதல், ஊட்டச்சத்து மதிப்பு, மற்றும் பூச்சிகள் எதிர்ப்புதன்மை,சுற்றுச்சூழல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் தன்மையை அதிகரிக்கச் செய்தல் ஆகியவை ஆகும். தோட்டக்கலை வல்லுனர்கள் தோட்டக்காரர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களாவும் உள்ளனர்.