நவ விலாச வானதூதர்கள்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவத்தில் நவ விலாச வானதூதர்கள் என்போர் கடவுளுக்கு பணிவிடை செய்யும், ஒன்பது குழுக்களைச் சார்ந்த உடலற்ற ”தூய அரூபிகள்” ஆவர்.[1] வானதூதர்கள் கிறிஸ்தவ கலைகளில் பொதுவாக, சிறகுகளுடன் கூடிய மனித உருவத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். கிரேக்க யூத மரபின்படியும், அதைப் பின்பற்றும் கிறிஸ்தவ மரபிலும் வானதூதர்கள் அவர்களது பணிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளில் அடக்கப்படுகின்றனர். அவர்கள் நவ விலாச சபையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.