நீர் பாதுகாப்பு
From Wikipedia, the free encyclopedia
நீர்பாதுகாப்பு (Water conservation) என்பது நீரின் இயற்கை வளத்தை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கும், நீர்க்கோளத்தை பாதுகாப்பதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால மனித சமுதாயத்திற்கான நீர் பற்றாக்குறையை ஒழித்து அவர்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அவசியமான அனைத்து கொள்கைகள், உத்திகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளைக் குறிக்கிறது. மக்கள்தொகை, குடும்பத்தின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகிய அனைத்து காரணிகளும் தண்ணீரின் பயன்பாட்டு அளவை பாதிக்கின்றன. காலநிலை மாற்றம் போன்ற காரணிகள் இயற்கையான நீர் ஆதாரங்களில் குறிப்பாக உற்பத்தி மற்றும் விவசாயப்பாசன நடவடிக்கைகளில் அழுத்தத்தை அதிகரித்துள்ளன.[1]பல நாடுகள் ஏற்கனவே தண்ணீர் பாதுகாப்பை இலக்காகக் கொண்ட கொள்கைகளை வகுத்தும் செயல்படுத்தியும் வெற்றி பெற்றுள்ளன.[2]தண்ணீரை பாதுகாப்பதற்கான முக்கிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு: நீர் இழப்பு ஏற்படுத்துதல், நீர் பயன்பாடு மற்றும் நீர் வளங்களை வீணாக்குதல் போன்ற நடவடிக்கைகளை உபயோகமான அளவுக்குக் குறைத்தல்; [3]நீரின் தரத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்துவதை தவிர்ப்பது; மேலும் நீரின் பயன்பாட்டை குறைக்கும் அல்லது மேம்படுத்தும் நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல்;[4][5]போன்றவற்றை இந்நடவடிக்கைகளாகக் கூறலாம். வீடுகளுக்கும் வணிகமற்றும் விவசாயப் பயன்பாடுகளுக்கும் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமூகத் தீர்வுகளில் ஈடுபடும் நீர்பாதுகாப்பு திட்டங்கள் பொதுவாக உள்ளூர் மட்டத்தில் நகராட்சி நீர்பயன்பாடுகள் அல்லது பிராந்திய அரசாங்கங்களால் தொடங்கப்படுகின்றன. பொதுமக்களிடம் பரப்புரை பிரச்சாரங்கள் தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும்போது படிப்படியாக அதிக விலை நிர்ணயம் செய்து வசூலித்தல் போன்ற முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் கட்டணங்கள் அல்லது புல்வெளி நீர்பாசனம் மற்றும் கார்கழுவுதல் போன்ற வெளிப்புற நீர்பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் விதித்தல் போன்றவை சிலபொது உத்திகளாகும்.