நூத்துபியப் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
நூத்துபியப் பண்பாடு ( Natufian culture (/nəˈtuːfiən/[1]) பண்டைய அண்மை கிழக்கின் பிந்தை நடு கற்காலத்தில் லெவண்ட் பிரதேசத்தில் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் கிமு 12,000 முதல் 9,500 முடிய விளங்கிய ஒரு தொல்பொருள் பண்பாடு ஆகும்.[2][3][4] இது உலகின் முதல் பண்பாடு எனக்கருதப்படுகிறது. தற்கால எரிக்கோ நகரம் நூத்துப்பியான் பண்பாட்டு காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாகும். நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில், உலகில் முதன்முதலில் வேளான்மை செய்த பகுதியாக அறியப்படுகிறது.[5] 14,500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் முதன் முதலாக ரொட்டி தயாரிக்கும் பகுதியாக நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில் ஒன்றான, ஜோர்தானின் வடகிழக்கு பாலைவனப்பகுதியில் அமைந்த சுபய்யா (Shubayqa) தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[6] மேலும் உலகின் தொன்மையான நூத்துப்பிய பண்பாட்டின் அரை-நாடோடி மக்கள் சமயச் சடங்குகளின் போது படையலுக்குப் பயன்படுத்திய, 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குடுவையை இஸ்ரேல் நாட்டின் கடற்கரை நகரமான ஹைபாவின் கார்மேல் மலையில் உள்ள ரக்கேபெட் குகையில் கண்டெடுக்கப்பட்து.[7][8]
நூத்தூபியப் பண்பாடு | |
---|---|
புவியியல் பகுதி | லெவண்டின் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள நூத்துப்பியப் பண்பாட்டின் தொல்லியல் களங்கள் |
காலப்பகுதி | நடுக் கற்காலம் (லெவண்ட்) |
காலம் | கிமு 13,050 – 7,550 அல்லது கிமு 12,000 – 9,500 |
வகை களம் | சக்குபா குகை (வாடியன் நூத்துப்) |
முக்கிய களங்கள் | சக்குபா குகை, அயின் மல்லா, டெல் அபு, அயின் ஜெவ், டெல் அபு ஹுரெய்ரா |
முந்தியது | கேப்ரான் பண்பாடு, முசாபியான் பண்பாடு |
பிந்தியது | புதிய கற்காலம்: கியாமியான், மேய்ப்போர் புதிய கற்காலம் |
பொதுவாக நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள் காட்டுத் தானியங்களையும், காட்டுச் சிறுமான்களையும் உணவாகக் கொண்டனர்.[9] தொல்லியல் அறிஞர் ஜி. கிறிஸ்டி டர்னரின் கூற்றுப்படி, லெவண்ட் பகுதியில் வாழும் தற்கால செமித்திய மொழிகள் பேசும் மக்களுக்கும், நூத்துப்பியப் பண்பாட்டு மக்களுக்கும் தொல்லியல் மற்றும் மானிடவியல் பண்புகள் அடிப்படையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக கருதுகிறார்.[10] (பிந்தைய புதிய கற்காலம் முதல் வெண்கலக் காலம்) வரையிலான [[[தொல்பொருளியல்]] பிற்காலத்தில் (கற்காலத்திலிருந்து வெண்கலக் காலம் வரை) லெவாண்டின்கள் முதன்மையாக நேட்டூபியர்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
செப்புக் காலத்திய அனதோலிய மக்கள் மற்றும் லெவண்ட் மக்கள் நூத்துப்பிய பண்பாட்டின் தாக்கங்களின் கலவையுடன் விளங்கினர் என தொல்பொருள் அறிஞர்கள் கருதுகின்றனர்.[11] டோரதி காரோடு எனும் தொல்லியல் அறினர் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதேயா மலையில் உள்ள சுக்பா குகையின் அகழ்வாய்வுகளின் அடிப்படையில் நூத்துப்பியப் பண்பாடு என்ற பெயர் வழங்கப்பட்டது எனக் கூறுகிறார்.