பக்கிங்காம் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace (UK: /ˈbʌkɪŋəm/)[1]) இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது. முதலில் பக்கிங்ஹாம் இல்லம் என அறியப்படும் இவ்விடம் 1703 ல் பக்கிங்ஹாம் பிரபு ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1761ல் மூன்றாம் ஜார்ஜால் அரசி ஷார்லட்டுகான தனிப்பட்ட இல்லமாக பெறப்பட்டு அரசியின் இல்லம் என அழைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கட்டிட கலைஞர்கள் ஜான் நாஷ் மற்றும் எட்வார்ட் ப்லோரால் இவ்விடம் விரிவாக்கப்பட்டது. 1837ல் அரசி விக்டோரியா பொறுப்பேற்ற பின் இவ்விடம் அரச குடும்பத்தின் இருப்பிடமானது. கடைசி முக்கிய கட்டமைப்புகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டபட்டன. ஆனால், இவ்வரண்மனை தேவாலயம், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் வெடிகுண்டுகளால் அழிந்து போனது; அங்கே அரசியின் இராஜரீகமான ஓவிய சேகரிப்புகளுக்கான கலைக்காட்சி கூடம் நிறுவப்பட்டு 1962ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. விக்டோரியா அரசியாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை மால் என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன. சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், அரண்மனையின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும்.