பண்டார் செரி பெகாவான்
From Wikipedia, the free encyclopedia
பண்டார் செரி பெகாவான் (ஆங்கிலம்: Bandar Seri Begawan; மலாய்: Bandar Brunei; ஜாவி: بندر سري بڬاوان; banda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் தலைநகரம் ஆகும். இதுவே அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[1]
பண்டார் செரி பெகாவான் | |
---|---|
Bandar Seri Begawan بندر سري بڬاوان | |
புரூணை தலைநகரம் | |
மேலிருந்து வலதுபுறமாக: உமர் அலி சைபுடின் பள்ளிவாசல், கம்போங் அயர், தி மால் கடோங், அசனுல் போல்கியா பள்ளிவாசல், கடோங் வணிகப் பகுதி | |
அடைபெயர்(கள்): The Venice of the East | |
ஆள்கூறுகள்: 4°53′25″N 114°56′32″E | |
நாடு | புரூணை |
மாவட்டம் | புரூணை முவாரா |
புரூணை சுல்தானகம் | 7 – 18-ஆம் நூற்றாண்டு |
ஐக்கிய இராச்சியம் | 19-ஆம் நூற்றாண்டு |
ஐக்கிய இராச்சியம் | 1906 |
புரூணை சுல்தானகம் | 1909 |
சுகாதார வாரியம் | 1921 |
நகராட்சி | 1935 |
அரசு | |
• நிர்வாகம் | பண்டார் செரி பெகாவான் நகராட்சித் துறை |
பரப்பளவு | |
• மொத்தம் | 100.36 km2 (38.75 sq mi) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2007) | 1,00,700 |
நேர வலயம் | ஒசநே+8 (புரூணை நேரம்) |
Area code | +673 2 |
இணையதளம் | www |
2010-ஆம் ஆண்டில் பண்டார் செரி பெகாவான் மக்கள் தொகை 140,000. இருப்பினும் பண்டார் செரி பெகாவான் நகரத்தைச் சூழ்ந்த புறநகர்ப் பகுதியிலும் சேர்ந்து 276,608 பேர் வசிக்கின்றனர். பண்டார் செரி பெகாவான் நகரம்; புரூணை - முவாரா மாவட்டத்தின் (Brunei-Muara District) ஒரு பகுதியாகும்.
புரூணை நாட்டின் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் முவாரா மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். பண்டார் செரி பெகாவான் நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற மையம்; மற்றும் நாட்டின் ஒரே நகரமாகவும் விளங்குகிறது. புரூணை அரசாங்கத்தின் இருப்பிடமாகவும், வணிக கலாசார மையமாகவும் திகழ்கிறது.[2]
புரூணையின் 28-ஆவது சுல்தானாகப் பொறுப்பு வகிக்கும் தற்போதைய சுல்தான் அசனல் போல்கியாவின் (Sultan Hassanal Bolkiah) தந்தையார் சுல்தான் உமர் அலி சைபுடியன் III (Sultan Omar Ali Saifuddien III) நினைவாக 1970-ஆம் ஆண்டில் மறுபெயரிடப்படும் வரை புரூணை நகரம் (Brunei Town) என்றே அறியப்பட்டது.[3]