பதாரியப் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
பதாரியப் பண்பாடு (Badarian culture) வரலாற்றுக்கு முந்தைய பண்டைய எகிப்தின் தெற்கு எகிப்தில் உள்ள பதாரி எனும் நகரத்தில் கிமு 5,000 முதல் கிமு 4,000 வரை செழித்திருந்த பண்பாடாகும். இப்பண்பாடுக் காலத்தில் தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதி ஒட்டிய பகுதிகளில் வேளாண்மை செழித்திருந்ததை காட்டுகிறது.[2][3] [1] 1922 மற்றும் 1931-ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் பதாரி தொல்லியல் களம் அகழாய்வு செய்யப்பட்டது.[4][5]இத்தொல்லியல்களத்தில் 40 குடியிருப்புகளும், 600 கல்லறைகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
பதாரியப் பண்பாடு | |
---|---|
[[File:|264px|alt=]] | |
புவியியல் பகுதி | மேல் எகிப்து |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | ஏறத்தாழ் கிமு 5,000 [1] —கிமு 4,000 |
வகை களம் | பதாரி தொல்லியல் களம் |
இயல்புகள் | தஸ்சியப் பண்பாடு, மெரிம்தி பண்பாடுகளுடன் சமகாலத்தியவை |
முந்தியது | பையூம் பண்பாடு |
பிந்தியது | அமராத்தியப் பண்பாடு |
பதாரிய பண்பாட்டுக் காலத்தில் பண்டைய எகிப்தின் தெற்கில் நைல் நதியின் இரு கரை ஓரங்களில் வேளாண்மை செய்தல், மீன் பிடித்தல், ஆடு, மாடு கால்நடைகள் வளர்க்கப்பட்டது. இப்பண்பாடுக் காலத்தில் வேளாண் பொருளாதாரம் செழித்தோங்கியது. இக்காலத்தில் கோதுமை, பார்லி, கிழங்குகள் மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டது. தரையடிக் குழிகளில் உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டது. சடங்குகளின் போது கால்நடைகள், நாய்கள் பலியிடப்பட்டு, உணவு தாணியங்கள் படையலிடப்பட்டது. இப்பண்பாடுக் கால வளரி போன்ற வேட்டைக் கருவிகளை பயன்படுத்தினர். [6] இக்கால மக்கள் மீன் பிடித்தலுடன், அழகிய சிறுமான்களை வேட்டையாடினர்.
பதாரியப் பண்பாட்டின் கட்டிடங்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இருப்பினும் மரக் கட்டைகளின் எச்சங்கள் ஒரு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறியப்படாத கட்டுமானத்தின் குடிசை அல்லது தங்குமிடத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் நாணல் புற்களால் அல்லது விலங்குகளின் தோல்களால் சுற்றப்பட்டு, குழிகளில் புதைக்கப்பட்டனர். அவர்களின் தலைகள் மேற்கு நோக்கி வைக்கப்பட்டது[6]இது மேற்குப் பகுதியை இறந்தவர்களின் தேசமாகக் கருதிய எகிப்தின் துவக்ககால அரசமரபுகளின் இறப்புச் சடங்குடன் ஒத்துப்போகிறது. இறந்தவர் உடலுடன் தந்தத்தினால் செய்யப்பட்ட் மான், தாயத்துகள், நீர்யானை உருவங்கள் சேர்த்து புதைக்கப்பட்டது.
இப்பண்பாட்டுக் கால கல்லறைகளில் இறந்தவர் உடலுடன் தந்தத்திலான மான், நீர் யானை போன்ற உருவங்கள், படிகங்கள் மற்றும் நகைகள்[6] சேர்த்துப் புதைக்கப்பட்டது.
கருவிகளில் கோடாரிகள், இருமுக அரிவாள்கள் மற்றும் குழிவான-அடிப்படை அம்புக்குறிகள் ஆகியவை அடங்கும். சமூக அடுக்கு சமூகத்தின் மிகவும் செழிப்பான உறுப்பினர்களை கல்லறையின் வேறு பகுதியில் புதைத்தனர்.
இந்த கல்லறைகளில் மேற்புறம் கருப்பு நிறமும், அடிப்புறம் சிவப்பு நிற மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்புகள் பதாரியப் பண்பட்டின் மிகவும் சிறப்பு கூறுகளாகக் கருதப்படுகிறது.