பத்தாம் பயஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் (இலத்தீன்: Pius PP. X, 2 சூன் 1835 – 20 ஆகத்து 1914, இயற்பெயர்: குயிசெபே மெல்கொரி சார்தோ), 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257-ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்தார். பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிகமுக்கிய செயல்பாடாக கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபை சட்ட தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களை தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவர் பிறந்த ஊரான ரெய்சி, இவரின் பொருட்டு பின்நாளின் ரெய்சி பியோ X (இதாலிய ஒளி பெயர்ப்பில் இவரின் பெயர்) என பெயர் மற்றம் செய்யப்பட்டது.
புனித பத்தாம் பயஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 4 ஆகஸ்ட் 1903 |
ஆட்சி முடிவு | 20 ஆகஸ்ட் 1914 (11 ஆண்டுகள், 16 நாட்கள்) |
முன்னிருந்தவர் | பதின்மூன்றாம் லியோ |
பின்வந்தவர் | பதினைந்தாம் பெனடிக்ட் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 18 செப்டம்பர் 1858 கியோவானி அன்டோனியோ ஃபாரினா-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 20 நவம்பர் 1884 லூசிதோ மரிய பரோசி-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 12 ஜூன் 1893 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | குயிசெபே மெல்கொரி சார்தோ |
பிறப்பு | (1835-06-02)2 சூன் 1835 ரெய்சி, லம்பர்டி-வெனிடா, ஆஸ்திய பேரரசு |
இறப்பு | 20 ஆகத்து 1914(1914-08-20) (அகவை 79) அப்போஸ்தலர் மாளிகை, உரோம் |
கையொப்பம் | |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 21 ஆகஸ்ட் 3 செப்டம்பர் (கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி 1955–1969) |
முத்திப்பேறு | 3 ஜூன் 1951 பன்னிரண்டாம் பயஸ்-ஆல் |
புனிதர் பட்டம் | 29 மே 1954 பன்னிரண்டாம் பயஸ்-ஆல் |
பாதுகாவல் | அட்லான்டா உயர் மறைமாநிலம்; தேஸ் மொயின்ஸ், ஐயோவா மறைமாநிலம்; புது நன்மை வாங்குவோர்; கிரேட் பால்ஸ்-பில்லிங்ஸ் மறைமாநிலம்; [கோட்டயம், இந்தியா மறைமாநிலம்; திருப்பயணிகள்; சான்டா லுசிஜா, மால்டா; ஸ்பிரிங் பீல்டு, மிசூரி மறைமாநிலம்; சம்போஙா, பிலிப்பைன்சு மறைமாநிலம் |
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவர் மரியாளிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் Ad Diem Illum என்னும் தனது சுற்றறிக்கையில், "மரியாளின் வழியாக கிறித்துவில் யாவற்றையும் புதுப்படைப்பாக்க" என்னும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையே தனது ஆட்சியின் குறிக்கோளுரையாகக் கொண்டார்[1]. 20-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தையாக இருந்தவரில் பத்தாம் பயஸ் மட்டுமே அதிக தளப்பணி செய்தவராவார்[சான்று தேவை]. இந்த அனுபவத்தாலேயே அவரவரின் சொந்த மொழியிலேயே மறைபரப்ப தூண்டினார்.
இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-இல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து திருத்தூதரக அரண்மனையில் தங்க வைத்தார்[2]. தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மிகவிருப்பமான உடன் பிறந்தவரின் மகன் கடைசிவரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். மற்ற மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர்[2]. 'நான் ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக விரும்புகிறேன்' என அடிக்கடி சொல்வார்[3]. பலர் இவரின் இறப்புக்கு பின் இவரை புனிதரெனக் கொன்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர். இதனாலேயே இவரின் புனிதர் பட்ட நிகழ்வு விரைவில் நடந்தேறியது[3].