பரா பகலவி
ஈரானின் முந்தைய ராணி / From Wikipedia, the free encyclopedia
பரா பகலவி ( Farah Pahlavi ) ( பிறப்பு 14 அக்டோபர் 1938) பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசருமான முகமது ரிசா பகலவியின் மனைவியாவார். மேலும் இவர் 1959 முதல் 1979 வரை ஈரானின் ராணியாகவும் பேரரசியாகவும் இருந்தார். ஒரு செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர் தனது தந்தையை தனது சிறுவயதிலேயே இழந்தார். பாரிஸில் கட்டிடக்கலை படிக்கும் போது, ஈரானிய தூதரகத்தில் முகமது ரிசாவுடன் அறிமுகமானார். இவர்கள் டிசம்பர் 1959 இல் திருமணம் செய்து கொண்டனர். சாவின் முதல் இரண்டு திருமணங்களிலும் வாரிசுக்கான மகன் பிறக்கவில்லை. பரா பகலவியுடனான திருமணம் மூலம் அடுத்த ஆண்டு அக்டோபரில் பட்டத்து இளவரசர் ரிசா பிறந்ததில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பரா அரசியலில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், சுதந்திரமாக இருந்தார். இவர் பல தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றினார். மேலும் ஈரானின் முதல் அமெரிக்க பாணி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். நாட்டில் அதிகமான பெண்கள் மாணவிகளாக மாற உதவினார். வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து ஈரானிய பழங்கால பொருட்களை திரும்ப வாங்கவும் இவர் உதவினார்.
பரா பகலவி | |
---|---|
அரச உடையில் பரா பகலவி, 1973 | |
ஈரான் ஷாவின் ராணி | |
இராணியாக | 21 திசம்பர் 1959 – 26 அக்டோபர்r 1967 |
பேரரசியாக (ஷாபானு) | 26 அக்டோபர் 1967[1] – 11 டிசம்பர் 1979 |
முடிசூட்டுதல் | 26 அக்டோபர் 1967 |
பிறப்பு | பரா திபி 14 அக்டோபர் 1938 (1938-10-14) (அகவை 85) தெகுரான்,[2] ஈரான் ஏகாதிபத்திய அரசு |
துணைவர் | |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | பகலவி வம்சம் (திருமணத்தின் மூலம்) |
தந்தை | சோரப் திபா |
தாய் | பரீதா கோத்பி |
கையொப்பம் |
1978 களில், பொதுவுடைமை, சமூகவுடைமை மற்றும் இசுலாமியவாதத்தால் தூண்டப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைதியின்மை ஈரான் முழுவதும் வரவிருக்கும் புரட்சியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டியது. ஜனவரி 1979 இல் மரண தண்டனை அச்சுறுத்தலின் கீழ் ராணியும் சுல்தானும் நாட்டை விட்டு வெளியேறினர். பெரும்பாலான நாடுகள் இவர்களுக்கு புகலிடம் அளிக்க தயங்கின. எகிப்தின் அன்வர் சதாத் விதிவிலக்காக இருந்தார். நாடு திரும்பினால் மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற நிலையில் இருவரும் இருந்தனர். நாடுகடத்தப்பட்ட முகமது ரேசா உடல்நிலை மோசமடைந்து ஜூலை 1980 இல் இறந்தார். விதவையான பரா தனது தொண்டு பணியைத் தொடர்ந்தார். வாசிங்டன், டி. சி. மற்றும் பாரிஸ் இடையே வசிக்கத் தொடங்கினர்.