பாபிலோன்
From Wikipedia, the free encyclopedia
பாபிலோன் (Babylon) அரமேயம்: בבל, Babel; அரபு மொழி: بَابِل, Bābil; எபிரேயம்: בָּבֶל, Bavel; Classical Syriac: ܒܒܠ, Bāwēl) கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் இயூபிரட்டீசு ஆற்றின் இடது மற்றும் வலது கரையில், தற்கால ஈராக் நாட்டின் தலைநகரான பகுதாதிற்கு 100 கிலோ மீட்டர் தெற்கே, கிமு 1800 முதல் கிமு 6-ஆம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரம் ஆகும்.[1] அரபு மொழியில் இந்நகரத்தை பாபில் என்றும், எபிரேய மொழியில் பாவெல் என்றும் அழைக்கப்பட்டது.
பாபிலோன் بابل | |
---|---|
பண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள் | |
மாற்றுப் பெயர் | அரபு: بابل Babil எபிரேயம்: בָּבֶל, Bavel |
இருப்பிடம் | இல்லாகு, பாபிலோன் ஆளுநரகம், ஈராக் |
பகுதி | கீழ் மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 32°32′11″N 44°25′15″E |
வகை | குடியிருப்பு |
பகுதி | பபிலோனியா புது பாபிலோனியப் பேரரசு |
பரப்பளவு | 9 km2 (3.5 sq mi) |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 2300 |
பயனற்றுப்போனது | கிபி 1000 |
கலாச்சாரம் | அக்காதியம், அசிரியா, அமோரிட்டுகள், காசிட்டுகள், சால்டியம், அகமானிசியம், எலனிய கிரேக்கம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | அருமுசித் ரசிசம், இராபர்ட் கோல்டிவே |
நிலை | சிதலமடைந்துள்ளது. |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | ஆம் |
பபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது.
கிமு 19ம் நூற்றாண்டு முதல் முதலாம் பாபிலோனிய வம்சத்தவர்களின் நகர இராச்சியமாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.
பாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது.
பாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது.
கிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 எக்டேர் பரப்பளவுடன் விளங்கியது.[2][3][4]
பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், இல்லா எனும் பகுதியில், பகுதாது நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது. டெல் தொல்லியல் களத்தில் கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[5]