பாஸ்கா முப்பெரும் நாட்கள்
From Wikipedia, the free encyclopedia
பாஸ்கா முப்பெரும் நாட்கள் என்பன[1] பெரிய வியாழன் மாலையில் தொடங்கி (புனித வெள்ளி திருவிழிப்பு)[2][3] உயிர்ப்பு ஞாயிறின் மாலை வரை உள்ள மூன்று நாட்களைக்குறிக்கும்.[2] இயேசுவின் பாடுகள், இறப்பு, அடக்கம், மற்றும் உயிர்ப்பினை கிறித்தவர்கள் இன்னாட்களில் நினைவுகூருவர்.[4]
விரைவான உண்மைகள் திருவழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்), திருவழிபாட்டுக் காலங்கள் ...
திருவழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்) |
---|
திருவழிபாட்டுக் காலங்கள் |
|
முக்கியப் பெருவிழாக்கள் |
|
மூடு
பெரிய வியாழன் மாலைத்திருப்பலியில் வானவர் கீதம் பாடப்பட்டப்பின்பு ஆலயமணிகள் ஒலிக்காது. ஆலய இசைக்கருவிகள் இசைக்கப்படாது. இதனால் இந்த நாட்களை அசைவற்ற நாட்கள் எனவும் அழைப்பர்.[5]
கத்தோலிக்க திருச்சபையில் பெரிய வியாழன் மாலை சடங்குகளுக்குப்பின்பு பாஸ்கா திருவிழிப்பு வரை ஒப்புரவு மற்றும் நோயிற்பூசுதலைத் தவிற பிற அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படா.[6]