பொது முடக்கம்
From Wikipedia, the free encyclopedia
பொது முடக்கம் (Lockdown) என்பது மக்கள் அல்லது சமூகத்தினை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்குவதற்கான ஒரு கட்டுப்பாட்டுக் கொள்கையாகும். சுதந்திரமாக நடமாடுவதால் அவருக்கோ அல்லது மற்றவர்களுக்குக் குறிப்பிட்ட அபாயங்கள் காரணமாக நகரவும் தொடர்பு கொள்ளவதை இதனால் தடுக்க முடியும். "வீட்டில் தங்கியிரு" அல்லது "தங்குமிடத்தில்-தங்கு" என்ற சொல் பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களைக் காட்டிலும் ஒரு பகுதியைப் பாதிக்கும் முடக்குதலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சிறை நெறிமுறைக்கு இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மக்களையோ, தகவல் அல்லது பொருள்களையோ ஒரு பகுதியை விட்டு வெளியேறுவதை இது தடுக்கிறது. நெறிமுறைகள் பொதுவாக அதிகார நிலையில் உள்ள ஒருவரால் மட்டுமே தொடங்கப்பட முடியும்.[1]
மக்களைப் பாதுகாக்க அவர்களை ஒரு வசதியான பகுதியில் எடுத்துக்காட்டாக, கணினி தொடர்புடன், பிற நிகழ்வுகளிலிருந்து பாதுகாக்க முடக்குதல் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களில் வாயில் கதவுகள் பொதுவாகப் பூட்டப்படுவதால் எந்த நபரும் நுழையவோ வெளியேறவோ முடியாது. ஒரு முழு முடக்குதல் ”பொது ஊரடங்கு” என்பது பொதுவாக மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்பதோடு, அங்குள்ள கட்டிடம் அல்லது அறையினை விட்டு வெளியேறவோ கூடாது. அத்தகைய இடத்தில் பாதுகாப்பு இல்லாவிட்டால் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள அருகிலுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும்.
தடுப்பு நடவடிக்கையாக கோவிட்-19 பெருந்தொற்றின் போது செயல்படுத்தப்பட்ட முதல் பொது முடக்கம் ஜனவரி 2020இல் ஊகானில் நடைமுறைப்படுத்தப்பட்டது.[2]