மகரந்தத்தூளியல்
From Wikipedia, the free encyclopedia
மகரந்தத்தூளியல் (Palynology) என்பது நுண்நோக்கியால் மகரந்தத்தை அவதானிப்பது குறித்த அறிவியல் ஆராய்ச்சிப் படிப்பாகும்.[1] இந்த அறிவியல் படிப்பானது நிகழ்கால மற்றும் கடந்தகால மகரந்தத் தூள்களைப் பற்றியது.
மகரந்தத்தூளியல் ஒரு பல்துறை சார்ந்த படிப்பாகும். இது புவியியல் மற்றும் உயிரியல் துறைகளில் ஓர் அங்கமாய் விளங்குகிறது. குறிப்பாக தாவரவியல் மற்றும் புவியியலில் பழங்கால சூழ்நிலைகளை அறிந்துகொள்ள இது பெரிதும் உதவுகிறது.