மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
From Wikipedia, the free encyclopedia
கூட்டாட்சிப் பகுதி (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: Federal Territories) என்பது மலேசியாவின் கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் பகுதிகளை மலேசியக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக ஆளப்படும் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.
விரைவான உண்மைகள் மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி Wilayah PersekutuanFederal Territories联邦直辖区, உள்ளடங்கியவை ...
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி
Wilayah Persekutuan Federal Territories 联邦直辖区 | |
---|---|
உள்ளடங்கியவை | கோலாலம்பூர் லபுவான் புத்ராஜெயா |
கூட்டாட்சிப் பகுதியானது | கோலாலம்பூர்: 1 பெப்ரவரி 1974 லபுவான்: 16 ஏப்ரல் 1984 புத்ராஜெயா: 1 பெப்ரவரி 2001 |
அமைச்சகத்தின் கீழ் அமைப்பு | 27 மார்ச் 2004 |
அரசு | |
• அமைச்சர் | சகிடான் காசிம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 381.65 km2 (147.36 sq mi) |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 16,02,388 |
• அடர்த்தி | 4,198.6/km2 (10,874/sq mi) |
மலேசிய அஞ்சல் குறியீடு | |
மலேசியத் தொலைபேசி எண் | 03a 087b |
மாநில கொள்கை | மாஜூ டான் செஜாத்திரா Maju dan Sejahtera |
மாநில நாட்டுப்பண் | மாஜூ செஜாத்திரா |
நிர்வாகம் | கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம் |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | W1 L2 PUTRAJAYA3 |
இணையதளம் | www.kwp.gov.my |
a கோலாலம்பூர் மற்றும் புத்ராஜாயா b லபுவான் 1 கோலாலம்பூர் 2 லபுவான் 3புத்ராஜாயா |
மூடு
கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும்; புத்ராஜாயா நிர்வாக தலைநகராகும்; லபுவான் கடல் கடந்த பன்னாட்டு நிதி மையமாகவும் செயல்படுகின்றன..கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி; புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதி; ஆகிய இரு கூட்டாட்சிப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ளன; லபுவான் கூட்டாட்சிப் பகுதி, சபா மாநிலத்தில் உள்ள ஒரு தீவாகும்.