மேரியான் கோப்
From Wikipedia, the free encyclopedia
மேரியான் கோப் (Marianne Cope) என்னும் பெண்மணி பிரான்சிஸ்கு சபையைச் சார்ந்த ஒரு துறவி ஆவார். அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சீரக்யூஸ் நகரில் அமைந்த பிரான்சிஸ்கு சபையில் உறுப்பினராக வாழ்ந்தார்.
புனித மேரியான் கோப் | |
---|---|
இளமைப் பருவத்தில் மேரியான் கோப் | |
கன்னியர்; துறவி; தொழுநோயாளருக்கு மறைப்பணியாளர் | |
பிறப்பு | சனவரி 23, 1838 ஹெப்பன்ஹைம், ஹெஸ்ஸே மாநிலம் (இன்று செருமனிப் பகுதி) |
இறப்பு | ஆகத்து 9, 1918 கலாவுபப்பா, ஹவாயி (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை; எப்பிஸ்கோப்பல் சபை (அ.ஐ.நா.) |
அருளாளர் பட்டம் | மே 14, 2005, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 21, 2012 இல் நிகழவிருக்கிறது, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | பிரான்சிஸ்கு சபை சகோதரிகளின் தலைமை இல்லத்தில் அமைந்த கோவிலும் அருங்காட்சியகமும் (சீரக்யூஸ், நியூயார்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்) |
திருவிழா | சனவரி 23 (கத்தோலிக்க சபை); ஏப்பிரல் 15 (எப்பிஸ்கோப்பல் சபை, அ.ஐ.நா.) |
பாதுகாவல் | தொழுநோயாளர், எய்ட்ஸ் நோயாளர்; ஹவாயி |
1838, சனவரி 23ஆம் நாளில் பிறந்த மேரியான் கோப் தமது எண்பதாம் வயதில், 1918 ஆகத்து 9ஆம் நாளன்று இறந்தார்.
பிறரன்புப் பணிகளைப் புரிவதில் இவர் தலைசிறந்து விளங்கினார். குறிப்பாக, ஹவாயியில் உள்ள மோலக்காய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு அன்புப் பணி செய்தார். தொழுநோயாளரின் குடியேற்றத்தில் அவர்களோடு மிக நெருங்கிப் பழகி அவர்களுக்குப் பணிசெய்தபோதிலும் மேரியானைத் தொழுநோய் தீண்டவில்லை. சிலர் அதை ஒரு அதிசயமாகவே காண்கிறார்கள்.
மேரியான் கோப் என்னும் இத்துறவிக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2005, மே 14ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.[1].
2012, அக்டோபர் 21ஆம் நாள் மேரியான் கோப் புனிதர் நிலைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் உயர்த்தப்பட்டார்.