மோகன்தாசு கரம்சந்த் காந்தி
'இந்திய தேசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார் / From Wikipedia, the free encyclopedia
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" [1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
விரைவான உண்மைகள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திMohandas Karamchand Gandhi, பிறப்பு ...
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி Mohandas Karamchand Gandhi | |
---|---|
1930களில் மகாத்மா காந்தி | |
பிறப்பு | (1869-10-02)அக்டோபர் 2, 1869 போர்பந்தர், இந்தியா |
இறப்பு | ஜனவரி 30 1948 (அகவை 78) புது தில்லி, இந்தியா |
இறப்பிற்கான காரணம் | படுகொலை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | மகாத்மா காந்தி |
கல்வி | லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்டம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | கஸ்தூரிபாய் |
பிள்ளைகள் | ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவதாஸ் |
கையொப்பம் |
மூடு
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.