2020 பிரான்சில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
2019–20 கொரோனாவைரசுத் தொற்று பிரான்சு நாட்டில் முதன் முதலாக சனவரி 24,2020 அன்று சீனாவிலிருந்து நாடு திரும்பிய 48 வயதான பிரெஞ்சு நாட்டு குடிமகனுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. துவே ஐரோப்பாவின் முதல் வைரசு தொற்று ஏற்பட்ட முதல் நபராவார்.இவர் [[பொர்தோ]] நகரை சேர்ந்தவர். அதே நாளில் மேலும் இருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது [3] இவ்வைரசு தொற்றால் முதல் மரணம் பிப்ரவரி 14ம் நாள் ஓர் சீன சுற்றுலா பயணி இறப்பை தொடர்ந்து ஆசிய கண்டத்திற்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட முதல் மரணம் ஆகும் [4]
2020 பிரான்சில் கொரோனா வைரசு தொற்று | |
---|---|
Confirmed cases per million inhabitants by region | |
Regions of France with number of people currently hospitalised
Hospitalised 1~9
Hospitalised 10~99
Hospitalised 100~499
Hospitalised 500~999
Hospitalised 1000~9999
Hospitalized ≥10000 | |
நோய் | COVID-19 |
தீநுண்மி திரிபு | SARS-CoV-2 |
அமைவிடம் | பிரான்சு |
முதல் தொற்று | Wuhan, Hubei, China |
நோயாளி சுழியம் | Bordeaux |
வந்தடைந்த நாள் | 24 January 2020 (4 ஆண்டு-கள், 3 மாதம்-கள், 1 வாரம் and 6 நாள்-கள்) |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 56,325[1] |
குணமடைந்த நோயாளிகள் | 7,882[2] |
இறப்புகள் | 4,025[1] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
Public Health France |
பிரான்சு நாட்டில் இவ்வைரசு தொற்றின் முக்கிய மையமாக அங்கு ஓர் தேவாலயத்தில் நடைபெற்ற வருடாந்திர நிகழ்வில் பங்கு பெற்றசுமார் 2500 நபர்களில் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது[5] [6] மார்ச்சு 31,2020 அன்று வரை நாட்டில் ஒட்டு மொத்தமாக 52,128 பேர் கோவிட் 19 வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,4,032 நபர்கள் இறப்பை எய்தியுள்ளனர்.7,132 மேற்பட்டவர்கள் இத்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.[1] [2]
மார்ச் 12 அன்று, பிரான்சின் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அரசு தொலைக்காட்சியில் அறிவித்த அறிவிப்பின்படி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்படுவதாக அறிவித்தார். [7] அடுத்த நாள் பிரதமர் அறிவிப்பின் படி 100 நபர்களுக்கு மேல் பொது வெளியில் கூடுவதை தடை செய்தார்.மார்ச் 16 அன்று, அதிபர் மக்ரோன் மார்ச் 17 , 2020 மதியம் தொடங்கி 15 நாட்களுக்கு தேசிய ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 27 அன்று, பிரதமர் எட்வார்ட் பிலிப் தேசிய ஊரடங்கை ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். [8]