கடல் எல்லை
From Wikipedia, the free encyclopedia
கடல் எல்லை (Maritime boundary) என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லை ஆனது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு, அண்மை கடற்பரப்பு, பொருளாதார தனியுரிமை பகுதி மற்றும் கண்டத் திட்டு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.