கருடன் (புராணம்)
From Wikipedia, the free encyclopedia
கருடன் (Garuda), காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர் – கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.[1][2]
விரைவான உண்மைகள் கருடன், அதிபதி ...
கருடன் | |
---|---|
கருடன் | |
அதிபதி | பறவைகளின் அரசன் |
தேவநாகரி | गरुड़ |
சமசுகிருதம் | கருடா |
வகை | பருந்து |
இடம் | வைகுந்தம், திருபாற்கடல் |
துணை | சுகீர்த்தி மற்றும் ருத்திரை |
மூடு
வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்