காந்த அதிர்வு அலை வரைவு
From Wikipedia, the free encyclopedia
காந்த அதிர்வு அலை வரைவு அல்லது M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. காந்த அதிர்வு அலை வரைவு (M.R.I. ஸ்கேன்) உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை.
இம்முறை புரோட்டான் படமாக்க முறை (proton imaging ) என்றும் அறியப்படுகிறது.காரணம் புரோட்டான்களே படிமங்களைப் பெற முக்கிய பங்களிக்கிறது.
எம்.ஆர்.ஐ எந்திரத்தின் மூலம் உடற்பிரச்சனைகளை நாம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கலாம். காந்த ஒத்திசைவு படமெடுத்தல் என்பதை ஆங்கிலத்தில் மேக்னடிக் ரெசொனென்ஷ் இமேஜிங்க் என்று கூறுவதால் இந்த இயந்திரத்தை எம்.ஆர்.ஐ என்று அழைக்கிறோம். இதை மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்துகிறார்கள். உடலிலுள்ள சில காயங்களை வெறுங்கண்ணால் காண முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்க முடியாத காயங்களை மிகைப்படுத்தி பார்க்க எம்.ஆர்.ஐ ஸ்கேன் உதவுகிறது. எம்.ஆர்.ஐ மூலம் மூளை கட்டி, மூட்டு வலிகள் மற்றும் மாரடைப்பு போன்ற பெரும் வியாதிகளையும் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும். எனவே சில கண்டுபிடிக்க முடியாத தீவிர நோய்களைக் கண்டுபிடிக்க எம்.ஆர்.ஐ பேருதவி புரிகிறது. காந்த அதிர்வு அலை வரைவு அணுக்கரு காந்த ஒத்திசைவைப் பயன்படுத்தியே கணனியில் படங்களைத் தோற்றுவிக்கின்றன.