தண்டு
From Wikipedia, the free encyclopedia
‘தண்டு' என்பது தாவரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். தண்டானது அதன் இணையுறுப்புக்களான தளிர் தண்டுகள், இலைகள், பக்கவாட்டு தண்டுகள், பூக்கும் தண்டுகள், மொட்டுகள் ஆகியவை உள்ளன. விதை முளைப்பிலிருந்து வரும் முதல் வளர்ச்சியாக வருவது தண்டு, அதிலிருந்து இலைகள் வளருகின்றன. வசந்த காலத்தில், உதிராத இலை தளிர்கள், அவை தரையிலிருந்து மேல்நோக்கி வளரும். தண்டுகளில் புதிய கிளைகள் தோன்றி மலர்கள் மலருகின்றன. அன்றாட பேச்சு வழக்கில் தண்டுகள் பெரும்பாலும் கிளைகளாகக் கருதப்படுகின்றன. கிளைகள் தண்டுகளின் முக்கிய பகுதிகளாகும். தண்டுகள் - கிளைகள், இலைகள், மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் வளருவதற்கு மையமாக அமைகின்றது. இளம் தண்டுகள் பெரும்பாலும் விலங்குகளால் சாப்பிடப்படுகின்றன. ஏனெனில் புதிதாய்த் தோன்றிய தண்டுகளில் உள்ள நார்கள், இடைநிலை செல்சுவர் முற்றும் முழுமையாக வளர்ச்சியடையாததால், இளம் தண்டுகள், மென்மையாக இருப்பதால் விலங்குகளால் எளிதாக மெல்லவும், ஜீரணிக்கவும் முடிகிறது. தண்டுகள் வளர்ச்சி அடையும் போது, இரண்டாம் செல் சுவர்களின் வளர்ச்சியால் கடினமான அமைப்பாக மாறுகிறது. சில தாவரங்கள் நச்சுப் பொருட்களைச் சுறந்து தண்டுகளைச் சாப்பிடக்கூடாத சுவை குறைவுள்ளதாக மாற்றுகிறது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |