வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்
ஐரோப்பிய 38 வருட போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் / From Wikipedia, the free encyclopedia
பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதாண்டுப் போர், மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்போர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓசுனாப்ருயூக் (Osnabrück) என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் மியூன்சிட்டர் (Münster) என்ற இடத்திலும் அமைதி உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. புனித ரோமன் பேரரசு, எசுப்பானியா, பிரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடியரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே வெசிட்டுட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (ஆங்கிலம்:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
விரைவான உண்மைகள் ஓசுனாப்ருயூக், மியூன்சிட்டர் அமைதி ஒப்பந்தங்கள், ஒப்பந்த வகை ...
ஓசுனாப்ருயூக், மியூன்சிட்டர் அமைதி ஒப்பந்தங்கள் | |
---|---|
மியூன்சிட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது | |
ஒப்பந்த வகை | அமைதி ஒப்பந்தம் |
வரைவு | 1646-1648 |
கையெழுத்திட்டது | 15 மே- 24 அக்டொபர் 1648 |
இடம் | ஓசுனாப்ருயூக் மற்றும் மியூன்சிட்டர், வெசிட்டுஃபாலியா, தற்கால ஜெர்மனி |
தரப்புகள் | 109 |
மூடு