இந்திய உடைகள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய உடைகள் (clothing in India) அப்பகுதியின் இனம், நிலவியல், பண்பாடு மற்றும் தட்பவெப்பம் பொறுத்து மாறுபடுகிறது. முதல் மனிதன் இலைகளை பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கினான். நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று பருத்தி, கம்பளி போன்ற பலவற்றை கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் நெய்தல், இழை, வண்ணம் மற்றும் ஆடை வகைகளில் மிகப் பெரிய மாறுபாடு இருக்கிறது. தனிப்பட்ட மத மற்றும் சடங்கை பொறுத்து உடுத்தும் ஆடையின் வர்ணம் அமைகிறது. உதாரணமாக இந்து மதப் பெண்கள், துக்கத்தை குறிக்க வெள்ளை நிற ஆடைகளை அணிய அதுவே பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் திருமணங்களில் வெள்ளை ஆடை அணிகிறார்கள்.