சாகித்திய அகாதமி
சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
சாகித்திய அகாதமி (Sahitya Akademi) (साहित्य अकादमी), இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பாகும்.[1]இந்நிறுவனம் இந்திய மொழிகளின் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன், தன்னாட்சி அமைப்பாக 12 மார்ச் 1954 அன்று, இரவீந்திர பவன், தில்லியில் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசுடன் கூடிய விருது அளித்து ஊக்கப்படுத்துவது, சிறுவர் இலக்கியங்களையும், சிறுபான்மையினர் பேசும் மொழிகளை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்து வருகிறது சாகித்ய அகாதமி நிறுவனம். சாகித்திய அகாதமியின் மண்டல அலுவலகங்கள், பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.
சுருக்கம் | SA |
---|---|
உருவாக்கம் | மார்ச்சு 12, 1954; 70 ஆண்டுகள் முன்னர் (1954-03-12) |
தலைமையகம் | இரவீந்திர பவன், தில்லி |
தலைமையகம் | |
சேவை பகுதி | இந்தியா |
தலைவர் | டாக்டர். விஸ்வநாத் பிரசாத் திவாரி |
வெளியீடு | இந்திய இலக்கிய இதழ் (மாதமிரு முறை) |
தாய் அமைப்பு | இந்தியக் கலாச்சார அமைச்சகம், இந்திய அரசு |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |