டார்ஜீலிங்
From Wikipedia, the free encyclopedia
டார்ஜீலிங் (Darjeeling, வங்காள: দার্জীলিং ) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இந்த நகரம் திகழ்கிறது.
டார்ஜீலிங் Darjeeling | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 27°02′N 88°10′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | மேற்கு வங்காளம் | ||||||
மாவட்டம் | டார்ஜிலிங் | ||||||
ஆளுநர் | சி. வி. ஆனந்த போசு[1] | ||||||
முதலமைச்சர் | மம்தா பானர்ஜி[2] | ||||||
மக்களவைத் தொகுதி | டார்ஜீலிங் Darjeeling | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
120,414 (2001[update]) • 10,500/km2 (27,195/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10.60 சதுர கிலோமீட்டர்கள் (4.09 sq mi) • 2,040 மீட்டர்கள் (6,690 அடி) | ||||||
குறியீடுகள்
|
இது மகாபாரத மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது. இந்தியாவை பிரித்தானியா ஆட்சி புரிந்த காலகட்டத்தில், டார்ஜீலிங்கின் மிதமான தட்பவெப்பநிலை அங்கிருந்த பிரித்தானிய மக்களுக்கு கோடை காலங்களில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கான புகலிடமாக அமைந்தது, அதுவே மலைவாழிடமாக (மலை நகரம்) இது வளர்ச்சியுறுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் டார்ஜீலிங் கோடைகால தலைநகரம் என்று வழங்குகிறது.
டார்ஜீலிங் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். ஆங்கிலேயர்கள் மேம்படுத்திய ஒரு பகுதியில், கடந்த 19 ஆம் நூற்றாண்டில் இங்கு தேயிலை பயிரிட்டார்கள். அந்த பகுதியில் தேயிலை வளர்த்தவர்கள் கருப்பு தேயிலையினுடைய தனித்தன்மை வாய்ந்த கலப்பினம் மற்றும் நொதித்தல் முறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தினார்கள், இம்முறையிலான அநேக கலப்பினங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவையாக கருதப்படுகின்றன.[3] இங்குள்ள டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே இம்மாநிலத்தில் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை இணைக்கிறது. இது உலக பாரம்பரியம் மிக்க இடமாக 1999 ஆம் ஆண்டில் புகழ்பெற்றது. இந்தியாவில் இயங்கிவரும் சில பழங்காலத்து புகை வண்டிகளில் எஞ்சிய ஒரு புகை வண்டி இங்கு இன்றுமியங்கி வருவதை நாம் காணலாம். நீராவி தொடர்வண்டிகளுள் ஒன்று தற்பொழுதும் இங்கு இயங்கி வருகிறது.
டார்ஜீலிங்கில் பெரும்பாலான பொதுப் பள்ளிகள், பிரித்தானிய முறை கல்வியை பின்பற்றுவதால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. கலிம்போன்ங்கின் அருகே இணைந்துள்ள முக்கிய மையமான இந்நகரம், 1980 ஆம் ஆண்டிலிருந்து கூர்க்காலாந்து என்னும் தனி மாநில கோரிக்கையை முன்வைத்துள்ளது, இருப்பினும் இந்த பிரிவினை இயக்கம் டார்ஜீலிங் கூர்க்கா மலைக்குழு அமைப்பு காரணமாக படிப்படியாக கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது. சமீப ஆண்டுகளில் இந்நகரம், சூழ்நிலை வள ஆதாரங்களைத் தடுக்கக்கூடிய வளர்ந்துவரும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் மோசமாக திட்டமிடும் நகர்மயமாக்கல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பு காரணமாக அழியத்தக்க சூழலுக்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது.