நடு இலையுதிர் கால திருவிழா
From Wikipedia, the free encyclopedia
நடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம்(Mid-Autumn Festival, சீனம் :中秋節) என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும். [1][2] இந்தக் கொண்டாட்டம் கான் நாட்காட்டியிலும் மற்றும் வியட்நாமிய நாட்காட்டியிலும் எட்டாம் மாதம் 15ம் நாள் முழு நிலவன்று கொண்டாடப்படுகிறது. இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் கிரெகொரியின் நாட்காட்டியின் படி முன் செப்டம்பருக்கும் முன் அக்டோபருக்கும் இடையில் வரும் பூரணை இரவில் கொண்டாடப்படுகிறது.[1] இத்திருவிழா சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் | |
---|---|
பெய்ஜிங்கில் இடை-இலையுதிர்கால கொண்டாட்ட அலங்கரிப்புக்கள். | |
அதிகாரப்பூர்வ பெயர் | 中秋節 (Zhōngqiū Jié in mainland China, சீனக் குடியரசு, சிங்கப்பூர்; Jūng-chāu Jit in ஆங்காங் மற்றும் மக்காவு) Tết Trung Thu (வியட்நாம்) |
பிற பெயர்(கள்) | சந்திர விழா, நிலவுத் திருவிழா (Moon Festival (八月節)) |
கடைபிடிப்போர் | சீன மக்கள், வியட்நாமியர் |
வகை | காலாச்சாரம், சமயம் |
முக்கியத்துவம் | இலையுதிர் கால அறுவடை முடிவுக்கான கொண்டாட்டம் |
அனுசரிப்புகள் | Consumption of mooncakes Consumption of cassia wine |
நாள் | எட்டாம் நிலாத் திங்களின் 15 ஆம் நாள் |
இக் கொண்டாட்டத்தினை முதன்மைச் சீனா அருவ கலாச்சார பாரம்பரியம் ஆக 2006இல் குறிப்பிட்டது, மற்றும் 2008இல் பொது விடுமுறையாகவும் அறிவித்தது.[1] இது தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் பொது விடுமுறையாகும். வியட்நாமிய கலாச்சாரத்தில், இது இரண்டாவது முக்கிய விடுமுறை தினமாகும்.
சீன மக்களின் கொண்டாட்டங்களில் முதன்மை இடத்தைப் வகிப்பது வசந்தவிழா ஆகும். அதனை அடுத்து வரும் மகத்தான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது இந்த இடைஇலையுதிர்கால கொண்டாட்டமாகும். அருமையான சிதோசன நிலை காணப்படும் இம்மகத்தான கொண்டாட்டம்; சந்திரன் இந்த நாள் வட்ட வடிவமாக காணப்படுவதால் சந்திர விழா எனவும் போற்றிக் கொண்டாடுவர். பூரண சந்திரன் அமைதிக்கும் சௌபாகியத்திற்கும் குடும்பங்கள் மீளச் சந்திப்பதற்குமான அடையாளமெனவும் சீன மக்கள் நம்புகின்றனர்.