முதிர்கரு
From Wikipedia, the free encyclopedia
முதிர்கரு (Fetus/Foetus) அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, கருவணுவாக (Zygote) உருவாகி, பின்னர் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவு மூலம் முளைய விருத்திக்கு உட்பட்டு முளையத்தை உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், குழந்தையாகப் பிறப்பு எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.
மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருத்தரிப்பு காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து[1][2] குழந்தை பிறப்பு வரை தொடரும்.