கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டு தோறும் தமிழ் மாதம் ஆவணி, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ணன் பிறப்பு பண்டிகை. / From Wikipedia, the free encyclopedia
சிரீ கிருட்டிண செயந்தி (சமசுகிருதத்தில் கிருட்டிண சென்மாட்டமி (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருட்டிண செயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாட்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் கிருட்டிண சென்மாட்டமி, பிற பெயர்(கள்) ...
கிருட்டிண சென்மாட்டமி | |
---|---|
கிருட்டிணனின் படம் | |
பிற பெயர்(கள்) | சென்மாட்டமி. சிரீ கிருட்டிண செயந்தி |
கடைபிடிப்போர் | இந்து |
வகை | சமயம் |
அனுசரிப்புகள் | பூசை, வேண்டுதல் மற்றும் விரதம் |
நாள் | சிரவணம், கிருட்டிண பட்சம், அட்டமி |
மூடு
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.