சுருள் ஏடுகள்
From Wikipedia, the free encyclopedia
சுருள் ஏடுகள் (scroll) பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது.[1]
புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1279 – கிமு 1213), பாபிரஸ் எனும் தடித்த காகிதத்தில், பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை துரின் மன்னர்கள் பட்டியல் என்பர்.[2]
கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்[3] எனும் யூதக் குழுவினர் விவிலியம் மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை பாபிரஸ் மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் எழுதி வைத்த சுருள் ஏடுகளை சாக்கடலின் வடமேற்கே உள்ள கும்ரான் குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.[4][5][6][7]