அர்செசிலௌசு
From Wikipedia, the free encyclopedia
அர்செசிலௌசு (/ˌɑːrsɛs[invalid input: 'ɨ']ˈleɪ.əs/; கிரேக்கம்: Ἀρκεσίλαος; கி.மு 316/5–கி.மு 241/0) [1]) ஒரு கிரேக்க மெய்யியலாரும் இரண்டாம் அல்லது நடு பிளாட்டோனியக் கல்விக்கழகத்தை நிறுவியவரும் ஆவார். இது கல்விக்கழகத்தின் ஐயுறவுவாதக் கட்டமாகும். அண். கி.மு 264இல் அர்செசிலௌசு ஏதென்சின் கிரேட்டசு என்பவருக்குப் பிறகு ஆறாம் தலைமைப்புலவராக அமர்ந்தார்.[2] அவர் தன் சிந்தனைகளை எழுத்தில் வடிக்கவில்லை. எனவே பிந்தைய எழுத்தாளர்களின் பதிவில் இருந்தே அவரது எண்ணங்களை அறிய முடிகிறது. மெய்யியல் ஐயுறவுவாதத்தை முன்னெடுத்த முதல் கல்விக்கழகத்தினர் இவரே ஆகிறார். அதாவது இவர் புலன்களின் உலக உண்மையறியும் திறமையை நம்ப மறுத்தார். என்றாலும் உண்மை நிலவுவதை (இருப்பதை) நம்பினார். இது கல்விக்கழகத்தில் ஐயுறவுவாதக் கட்டத்தை உருவாக்கியது. இவரது முதன்மையானஎதிரிகள் சுதாயிக்குகளே ஆவர். சுதாயிக்குகள் நிலவலை நம்பியதோடு அதை உறுதியாக அறிதல் ஒல்லும் என்றனர்.
அர்செசிலௌசு | |
---|---|
அர்செசிலௌசும் கார்னியடெசும் | |
பிறப்பு | கி.மு 316/5 பிதானே, அயோலிசு |
இறப்பு | கி.மு 241/0 ஏதென்சு |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | பிளாட்டோனியம் |
முக்கிய ஆர்வங்கள் | பிளாட்டோனியம் , கல்விக்கழக ஐயுறவுவாதம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | கல்விக்கழக ஐயுறவுவாதம் நிறுவனர் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |