கார்னியாடெசு
From Wikipedia, the free encyclopedia
கார்னியாடெசு (Carneades, கிமு 214/3 – கிமு 129/8[1]) ஒரு கல்வியியல் ஐயுறவுவாதி. இவர் லிபியாவில் உள்ள சைரீனில் பிறந்தார். கி.மு 159அளவில் அவர் முந்தைய வறட்டுவாத நெறிகளை எதிர்க்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக உறுதிப்பாட்டுவாதம், Epicurean போன்ற மற்ற ஐயுறவுவாதிகளும் விட்டுவைத்த சுதாயிக்கியம், எப்பிகூரியனியம் போன்ற போக்குகளையும் கூட எதிர்க்கலானார். உரோமுக்கு கி.மு 155இல் அனுப்பப்பட்ட மூன்றுபேரில் பிளாட்டோனியக் கல்விக்கழகத் தலைவரான இவரும் ஒருவராவார். அங்கு இவர் ஆற்றிய நயன்மையின் உறுதியிலாமை குறித்த விரிவுரைகள் முன்னணி அரசியல்வாதிகளுக்குப் பெருங்கலவரத்தைத் தந்து அதிரச் செய்துள்ளது. இவர் எழுத்துவழி ஏதும் எழுதி வைக்கவில்லை. அவரது பின்னவரான Clitomachus வழியாகவே கார்னியாடெசின் கருத்துகள் எல்லாம் அறியப்பட்டுள்ளன. இவர் உண்மையை அறிவதில் புலன்களின் திறமையை மட்டுமன்றி, பகுத்தறிவு வழிமுறையையும் ஏற்கவில்லை. ஆனாலும் இவரது ஐயுறவுவாதம், அன்றாடம் சரியாக வாழவும் சரியாகச் செயற்படவும் தேவைப்படும் நிகழ்தகவான உண்மையை ஏற்றுச் சமனமுற்றது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கார்னியாடெசு Carneades | |
---|---|
கார்னியாடெசு கிமு 150 | |
பிறப்பு | கிமு 214/213 சைரீன், லிபியா |
இறப்பு | 5 நவம்பர், கிமு 128 ஏதென்சு |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | கல்வியியல் ஐயுறவியல், பிளேட்டோனியம் |
முக்கிய ஆர்வங்கள் | அறிவாய்வியல், நன்னெறி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மெய்யியல் ஐயுறவாதம், அறிவு பற்றிய நிகழ்தகவுக் கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |