உயிரின ஏணிப்படிகள்
தொல்லுயிரியலார் இயற்கை / From Wikipedia, the free encyclopedia
உயிரின ஏணிப்படிகள் என்பது தொல்லுயிரியலார் இயற்கை வரலாற்றை அல்லது படிமலர்ச்சி நிலையைப் பிரித்துள்ள பன்னிரண்டுக் காலப் பிரிவுகளாகும். நமது புவிக் கோளத்தில் 3.50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உயிர் வாழ்க்கை நிலவுகிறது. முதலில் உயிரணுக்கள் எனும் உயிர்க் கலன்கள் (cells)தோன்றின. இவை உயிர் வாழ்க்கையின் அடிப்படை அலகுகளாகும். பிறகு இவற்றிலிருந்து உயர்நிலை உயிரிகள் தோன்றிப் படி மலந்தன. இவ்வகையாகத் தான் நமது புவியுலகில் வரம்பற்ற உயிரின வலைப் பின்னல் உருவாகிப் பல்கிப் பெருகி வருகிறது. விலங்குகளாலான இயங்கு திணை உலகும் (Animalia) மரம், செடி,கொடி, புதர், புல்,பூண்டுகளாலான நிலைத்திணை உலகும்(Plantea) மற்றும் பூஞ்சை உலகும்(ஃபுஙி) மிக நெருக்கமான உணவுத் தொடர்களாலான உணவு வலையால் பிணைக்கப்பட்டுள்ளன. படிமலர்ச்சி (evolution) என்பது தகவமைவு, வீழ்ச்சி, மீள்புனைவு ஆகிய தொடர் உள்கூறுகள் வாய்ந்ததாகும். இதன் ஒவ்வொரு பிரிவும், அக்காலஞ்சார்ந்த தொல்லுயிர் எச்சம் அல்லது புதைப் படிவத்தின் வகைமையை ஒட்டியே பிரிக்கப்படுகின்றன.