கசினியின் மகுமூது
From Wikipedia, the free encyclopedia
யமீன் உத் தவ்லா அபுல் காசிம் மகுமூது இப்னு செபுக்தெகின் (பாரசீக மொழி: یمینالدوله ابوالقاسم محمود بن سبکتگین; 2 நவம்பர் 971 – 30 ஏப்ரல் 1030) என்பவர் துருக்கிய மக்கள் குழுவினரின்[2][3] கசனவித்து அரசமரபைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் 998 - 1030இல் ஆட்சி புரிந்தார். இவர் கசினியின் மகுமூது அல்லது மகுமூது கசனவி (பாரசீக மொழி: محمود غزنوی)[4] என்றும் அழைக்கப்படுகிறார். இவரது இறப்பின் போது இவரது இராச்சியமானது ஒரு விரிவான இராணுவப் பேரரசாக மாறி இருந்தது. வடமேற்கில் பொதுவான ஈரான் முதல் இந்திய துணைக்கண்டத்தில் பஞ்சாப் வரையிலும், திரான்சாக்சியானாவில் குவாரசமியா, மற்றும் மக்ரான் வரையிலும் பரவியிருந்தது.
| |||||
---|---|---|---|---|---|
| |||||
கலீபா அல் காதிரிடம் இருந்து ஒரு மேலங்கியைப் பெறும் கசினியின் மகுமூது (நடுவில்); இரசீத்தல்தீன் அமாதனியின் ஓவியம் | |||||
கசனவித்துப் பேரரசின் சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் |
| ||||
முன்னையவர் | கசினியின் இசுமாயில் | ||||
பின்னையவர் | கசினியின் முகம்மது | ||||
பிறப்பு | 2 நவம்பர் 971 காசுனி, சபுலிசுதான், சாமனிட் பேரரசு (தற்கால ஆப்கானித்தான்) | ||||
இறப்பு | 30 ஏப்ரல் 1030(1030-04-30) (அகவை 58) காசுனி, சபுலிசுதான், கசனவித்துப் பேரரசு (தற்கால ஆப்கானித்தான்) | ||||
புதைத்த இடம் | |||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
பாரசீகம் | یمینالدوله ابوالقاسم محمود بن سبکتگین | ||||
அரசமரபு | கசனவித்து குடும்பம் | ||||
தந்தை | சபுக்திகின் | ||||
மதம் | சன்னி இசுலாம் (அனாபி) | ||||
இராணுவப் பணி | |||||
சேவைக்காலம் | அண். 998 – 1030 | ||||
விருதுகள் | பொ. ஊ. 1000இல் கலீபா அல் காதிரிடம் இருந்து மரியாதைக்குரிய மேலங்கியைப் பெறுதல். | ||||
அதிகப்படியான பாரசீகமயமாக்கப்பட்ட[5] மகுமூது தனக்கு முன்னிருந்தவர்களான சாமனிடு பேரரசின் அதிகாரக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தார். பஞ்சாப்பில் ஒரு எதிர்கால பாரசீகமயமாக்கப்பட்ட அரசுக்கான தளத்தை இவர் நிறுவினார். தான் வென்ற ஒரு நகரமான இலாகூரை மையமாகக் கொண்டு இந்த அரசு அமைந்தது.[6] இவரது தலைநகரமான காசுனி இஸ்லாமிய உலகில் ஒரு முக்கியமான கலாச்சார, வணிக மற்றும் கல்வி மையமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. கிட்டத்தட்ட முக்கிய நகரமான பகுதாதுவுக்குச் சவால் விடுக்கும் வகையில் இது திகழ்ந்தது. இத்தலைநகரமானது அல்-பிருனி மற்றும் பிர்தௌசி போன்ற பல முக்கிய நபர்களைக் கவர்ந்திழுத்தது.[6]
மகுமூது அரியணைக்குத் தன் 27ஆம் வயதில்,[7] தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு, தன் தம்பி இசுமாயிலுடனான ஒரு குறுகிய வாரிசுப் போருக்குப் பிறகு அரியணைக்கு வந்தார். சுல்தான் ("அதிகாரமுடையவர்") என்ற பட்டத்தை முதன் முதலில் வைத்திருந்த ஆட்சியாளர் இவர் தான். இப்பட்டம் இவரது சக்தியின் விரிவையும், அதே நேரத்தில் அப்பாசியக் காலீபாக்கள் இவரது மேற்பார்வையாளர்கள் என்ற ஒரு சித்தாந்தத் தொடர்பையும் அழியாது வைத்திருந்தது. இவரது ஆட்சியின் போது நடுக்கால இந்தியாவில் மதுரா மற்றும் சோம்நாத் போன்ற செல்வச்செழிப்பு மிக்க நகரங்கள் மற்றும் கோயில் பட்டணங்கள் மீது 17 முறை படையெடுத்துக் கொள்ளையடித்தார். இந்தக் கொள்ளையடித்த பொருட்களைக் கொண்டு காசுனியில் தனது தலைநகரத்தைக் கட்டினார்.[8][9]