கானாடுகாத்தான்
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி / From Wikipedia, the free encyclopedia
கானாடுகாத்தான் (ஆங்கிலம்:Kanadukathan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை நகரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது
விரைவான உண்மைகள்
கானாடுகாத்தான் | |
அமைவிடம் | 10°10′29″N 78°46′54″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
5,275 (2011[update]) • 659/km2 (1,707/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
மூடு
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,362 வீடுகளும், 5,275 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 8 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]