மாவட்டம் (இந்தியா)
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
தற்போது மார்ச், 2020 அன்று இந்தியாவில் 734 மாவட்டங்கள் உள்ளது. முன்னர் 2008-ஆம் ஆண்டில் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன.[1] 2011-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன.[2][3][4]. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது. முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் என 1874, பட்டியலிட்ட மாவட்ட சட்டத்தில்’’ குறிப்பிட்டனர்.[5]
மாவட்டம் | |
---|---|
| |
வகை | மாநில அளவில் இரண்டாம் நிலை நிர்வாகப் பகுதி |
அமைவிடம் | இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் |
எண்ணிக்கை | 739 (as of மார்ச், 2020) |
மக்கள்தொகை | பெரியது:தானே மாவட்டம், மகாராட்டிரா—1,10,60,148 (2011 census) சிறியது : மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம்—8,004 (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) |
பரப்புகள் | பெரியது: கட்ச் மாவட்டம், குஜராத்—45,652 km2 (17,626 sq mi) சிறியது: மாகே மாவட்டம், புதுச்சேரி—8.69 km2 (3.36 sq mi) |
அரசு | மாவட்ட நிர்வாகம் |
உட்பிரிவுகள் | வருவாய் வட்டம் அல்லது தாலுகா அல்லது மண்டல் குறு வட்டம் (பிர்கா), வருவாய் கிராமம் |
மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் பொது நிர்வாகத்திற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார். சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர். இந்தியக் காவல் பணி அதிகாரி, காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையராகப் பொறுப்பேற்று மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.
வருவாய் மாவட்டங்களை வருவாய் வட்டங்களாகவும் (தாலுகாக்கள்), குறு வட்டங்களாகவும், வருவாய் கிராமங்களாகவும் பிரித்துள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களாகவும் (பஞ்சாயத்து யூனியன்), கிராம ஊராட்சி (பஞ்சயத்து) களாகவும்; நகர உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளாகவும் பிரித்துள்ளனர். இதன் மூலம் நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (மண்டலம்) உருவாக்கப்படுகின்றன. அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார். இந்த நடைமுறை தமிழ்நாடு மாநிலத்தில் இல்லை.