கைவினை வெடி குண்டு
From Wikipedia, the free encyclopedia
கைவினை வெடிகுண்டு (improvised explosive device, IED) அல்லது தெருவோர குண்டு என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு, வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும். வழமையான படைத்துறை ஆயுதங்களை, காட்டாக எறிகணைகளை, வெடிக்கவைக்கும் இயங்குமுறையோடு இணைத்தும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகைய கைவினை வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் செயல்படுத்தலாம்; அல்லது வழமையில்லா போர்களில் கொரில்லாப் போர்முறையில் போராளிகளும் அதிரடி படைகளும் தங்கள் சண்டைக்களங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவது இராக் போரின்போது கைவினை வெடிகுண்டுகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன; 2007ஆம் ஆண்டு இறுதியில் இராக்கில் இறந்த கூட்டுப் படையினரில் 64% கைவினை வெடிகுண்டுகளுக்கே பலியாயுள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் கிளர்ச்சிக்காரர்கள் இவ்வகை வெடிகுண்டுகளால் 2001 முதல் இன்றுவரை 66% கூட்டுப் படையினரை அழித்ததாக மதிப்பிடப்படுகிறது.[1]
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் படைத்துறை இலக்குகளை நோக்கி இத்தகைய வெடிகுண்டுகளையே பயன்படுத்தினர்.[2][3] இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களில் கைவினை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.