இந்தியாவில் தீவிரவாதம்
From Wikipedia, the free encyclopedia
இசுலாமிய, இந்து, சீக்கிய, கிறித்தவ மற்றும் நக்சலைட் புரட்சி இயக்கங்கள் இந்தியாவில் தீவிரவாதத்தின் (Terrorism in India) மூலக்காரணிகளாக இருக்கின்றன.[சான்று தேவை]
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ இந்தியாவில் பயங்கரவாதம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதிகளின் நீண்டகால நடவடிக்கைகள் உள்ள பிராந்தியங்களாக சம்மு காசுமீர், மும்பை, மத்திய இந்தியா (நக்சலிசம்) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் (சார்பற்ற தன்னாட்சிச் செயல்பாடுகளைக் கொண்டது) ஆகியவை கருதப்படுகின்றன. முற்காலத்தில் இந்திய மாநிலமான பஞ்சாப் மற்றும் தலைநகரமான டெல்லியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடக்கமாக பஞ்சாப் கிளர்ச்சி அமைந்தது.
2006 ஆம் ஆண்டு வரை நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தபட்சமாக 232 பேர் தீவிரவாத நடவடிக்கைகளால் அல்லல்பட்டனர். மேலும் இவர்கள் தீவிரவாத இயக்கங்களின் வெவ்வேறு விதமான தாக்குதலுக்கும் ஆளாகினர்.[1] 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனன் கூறுகையில், 800 க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்கள் நாட்டில் உள்ளன என்றார்.[2]