சலாகுத்தீன்
அய்யூபிய மரபின் நிறுவுனர் / From Wikipedia, the free encyclopedia
சலாகத்தீன் யூசுப் இப்னு அய்யூப்[lower-alpha 1] (Salah ad-Din Yusuf ibn Ayyub, அண். 1137 - மார்ச் 4, 1193, அரபு: صلاح الدين يوسف بن أيوب; குர்தி: سهلاحهدین ئهیوبی) என்பவர் அய்யூப்பிய அரசமரபின் நிறுவனர் ஆவார். மேற்குலகில் பொதுவாக சலாதீன்[lower-alpha 2] என்றும் இவர் அறியப்படுகிறார். இவர் ஒரு குர்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எகிப்து மற்றும் சிரியா ஆகிய இரு பகுதிகளின் முதல் சுல்தான் இவராவார். மூன்றாம் சிலுவைப் போரில் ஒரு முக்கியமான நபராக இருந்த இவர் லெவண்டில் இருந்த சிலுவைப் போர் அரசுகளுக்கு எதிராக முஸ்லிம் இராணுவ முயற்சிக்குத் தலைமை தாங்கினார். இவரது அதிகாரத்தின் உச்ச நிலையில் அய்யூப்பிய அரசானது எகிப்து, சிரியா, மேல் மெசொப்பொத்தேமியா, ஹெஜாஸ், ஏமன் மற்றும் நூபியா ஆகிய இடங்களில் பரவியிருந்தது.
விரைவான உண்மைகள் சலாகத்தீன், எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான் ...
சலாகத்தீன் | |
---|---|
வெற்றியை வழங்கும் மன்னன் சிரியா மற்றும் எகிப்தின் சுல்தான் | |
எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 1174 – 4 மார்ச் 1193 |
முடிசூட்டுதல் | 1174, கெய்ரோ |
முன்னையவர் | அல் அதித் (பாத்திமிய கலீபாவாக) |
பின்னையவர் |
|
பாத்திம கலீபகத்தின் உயரதிகாரி | |
ஆட்சிக்காலம் | 26 மார்ச் 1169 – 26 செப்தெம்பர் 1171 |
முன்னையவர் | சிர்குக் |
பின்னையவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
பிறப்பு | யூசுப் இப்னு அய்யூப் அண். 1137 திக்ரித், மேல் மெசொப்பொத்தேமியா, அப்பாசியக் கலீபகம் |
இறப்பு | 4 மார்ச் 1193 (அகவை 55–56) திமிஷ்கு, சிரியா, அய்யூப்பிய வம்சம் |
புதைத்த இடம் | உமய்யா மசூதி, திமிஷ்கு |
துணைவர் | இசுமததீன் கதுன் |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | அய்யூப்பிய அரசமரபு (நிறுவனர்) |
தந்தை | அய்யூப் இப்னு சாடி |
மதம் | சுன்னி இசுலாம் |
மூடு